Thursday, November 08, 2007

கனாக் காணும் காலங்கள் - முன்னுரை

கனாக் காணும் காலங்கள் - இது தாங்க நான் புதுசா எழுதப் போற கதையோட தலைப்பு!

என்னடா 'கவிதை கேளுங்கள்' ன்னு வலைப்பூ வைச்சிக்கிட்டு, 'கதை கேளு' ன்றானேன்னு பாக்குறீங்களா? நானும் யோசிச்சேன் அதையே தான். இதுனால தான் ஏற்கெனவே சில நண்பர்கள் அழைத்த தொடர்/சங்கிலிப் பதிவுக்குக் கூட இந்த வலைப்பூவைப் பயன்படுத்தாம, வேற ஒண்ணுல எழுதினேன்.

இப்போ கூட, 'கதை கேளுங்கள்' ன்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமான்னு ஒரு ரோசனை! ஆனா, கண்டிப்பா காறித்துப்பிருவீகன்னு ஒரு சந்தேகந்தேன்!

இருக்காதா பின்னே? ஆடு குட்டி போட்ட கணக்கா ஏற்கெனவே ஒரு ஏழெட்டு வலைப்பூ இருக்கு! இதுல இன்னொண்ணா? 'நாடு தாங்காது சாமி'ன்னு நானே ஒரு முடிவெடுத்து இதுலயே களமிறங்கலாம்னு இந்த இனிய தீபாவளித் திருநாளில் மங்கலகரமாப் பிள்ளையார் சுழி போடறேன்...

ஒங்க நல்லாதரவு மற்றும் ஆசீர்வாதத்தோட....

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/08/2007 08:44:00 PM, |

2 பின்னூட்டங்கள்:

  At Wednesday, November 21, 2007 2:02:00 AM Blogger Pattabi நவின்றது:
Reading a good story after long time. You can send this story to the tamil magazines after completion.
@pattabiraman,

வருக தம்பி வருக!

//Reading a good story after long time.//

நன்றி. மிக்க மகிழ்ச்சி!

// You can send this story to the tamil magazines after completion//

அப்படியா? சரி..நிச்சயம் முயல்கிறேன். ஆலோசனைக்கு நன்றி.

மீண்டும் வருக!