Saturday, April 04, 2009

திருமணக் கவிதை

பிரத்யேகப் பதியன்
ஏதும் இடாமல்
புதியதொரு பரிணாமம்!

இருவேறு திசைக‌ளில்
இருந்து முழுவீச்சில்
எதிர்பார்ப்புக்க‌ள் ம‌ற்றும்
க‌னவுக‌ளின் ச‌ஞ்சார‌ம்!

எவரொருவ‌ருக்கும் இல்லாத‌
சிறப்பான உரிமையுட‌ன்
ஒரு புது உற‌வு!

முதல்நாள் இரவில்
ஒப்புவித்த‌ க‌ன‌வுக‌ளை
மறுநாள் விடியலில் நிஜ‌மாக்கும்
வல்லமையுள்ள தேவன் இல்லை!

நிலாவைப் பிழிவேன்!
சூரியனைச் சுகிப்பேன்!
காற்றைக் கைது செய்வேன்
என வார்த்தைகளில் ம‌ட்டும்
வசீகரப்படுத்தும் கவிஞன் இல்லை!

க‌ன‌வுக‌ளை நிஜ‌மாக்கும்
முய‌ற்சிக‌ளில் க‌ஞ்ச‌த்த‌னமின்றி,
க‌விதைத்துவமான‌ வாழ்வைக்
க‌ளிப்போடு அளிக்கும் க‌ற்ப‌னையுட‌ன்,

உண்மையான‌ அன்பை
உள்ளுண‌ர்த்தி உன‌க்கும்
உண‌ர்வுகள் உண்டென்ப‌தை
உள்ளூர உண‌ர்ந்து உய்ப்பேன் என்று
உறுதிமொழியும் கவித்துவமும்,
தெய்வ‌த்துவமும் கொண்ட ம‌னிதன் !


-- மு. இராக‌வ‌ன் என்ற‌ ச‌ர‌வ‌ண‌ன்
04 ஏப்ர‌ல் 2009 ச‌னிக்கிழ‌மை மாலை 541 ம‌ணி இந்திய‌ நேர‌ப்ப‌டி

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/04/2009 07:54:00 PM, | 19 பின்னூட்டங்கள்