Thursday, August 23, 2007

தபூசங்கரின் 'கருப்புப்பெட்டி'


ரயில் பயணங்களின் போது...
வீட்டு ஜன்னல்களின் வழியே
கையசைக்கும் குழந்தைகளுக்கு
பதில் கையசைக்கும் கைகள் எனக்கில்லை
*

திட்டமிட்டு யாரையும் ஏமாற்றுகிற துணிவு
என்னகில்லையென்றாலும்
ஏதாவத்டு உணவகத்திலோ
மருந்தகத்திலோ
கொடுத்த பணத்தைவிட அதிகமாக தந்தால்
பேசாமல் வாங்கி வருபவனில்
நானும் ஒருவனே

*

எப்படியேனும்
எல்லோரிடமிருந்தும் தப்பித்து
வீடு வந்து கண்மூடினால்
என்னிடம் மாட்டிக் கொள்கிறேன்

*

நாள் முழுவதும் கூந்தலிலிருந்த பூவை
எந்தச் சலனமுமின்றி
எடுத்தெரிந்துவிட்டு
வேறு பூவைச் சூடிக் கொள்ள
எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்

*

அவ்வளவு தொலைவிலிருந்து
குழந்தைகள் சாப்பிட உதவும்
நிலவில்
மனிதன் உயிர் வாழமுடியாது என்பதை
எப்படி நம்புவது?

*

'அ'-வுக்கு முந்தி எழுத்துக்கள் இல்லையெனினும்
'அ'- எழுதப் பழகிய என் கிறுக்கல்களெல்லாம்
'அ'-வுக்கு முந்திய எழுத்துக்களே

*

நான் யாரைப் பார்க்கப் போனாலும்
அவர் தனிமையில் இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு
தனிமை
கலைக்கப்படுகிறபோது
ஏற்படும் இழப்புகளை
நான் அறிவேன்!
 
 
நன்றி திரு. கார்த்திக்பிரபு (http://gkpstar.googlepages.com)

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/23/2007 05:28:00 PM, |

4 பின்னூட்டங்கள்:

@Karthick Prabhu,

thanks for the instant comment ;-)
  At Thursday, August 23, 2007 5:50:00 PM Anonymous Anonymous நவின்றது:
ஏற்கனவே படித்ததுதான் என்றாலும், இன்னொரு முறை படிக்கும் போதும் நன்றாயிருக்கிறது.

இந்த புத்தகத்தில் காதலே இல்லாமல் ஒரு புதிய தபூ சங்கரைப் பார்க்க முடியும்....
@நந்தா,

நன்றி.

//ஏற்கனவே படித்ததுதான் என்றாலும், இன்னொரு முறை படிக்கும் போதும் நன்றாயிருக்கிறது.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள். எப்போதும் நாம் ரசித்த விஷயங்களை மீண்டுமொரு முறை ரசிப்பதில் சோம்பலே கொள்வதில்லை ரசிகமனம்.

//இந்த புத்தகத்தில் காதலே இல்லாமல் ஒரு புதிய தபூ சங்கரைப் பார்க்க முடியும்.... //

புத்தகத்தை இன்னும் பார்க்கவில்லை நந்தா. இனிமேல் தான் படிக்கவேண்டும்.

தகவலுக்கு நன்றி