Wednesday, April 18, 2007

ஊமைக்கும் தண்டனை உண்டு!

உலகத்து மொழிகளை எல்லாம்
ஊமையாக்கி உடனிருப்பவர்
எவருக்குமே புரியாத வண்ணம்
உலாவரும் 'நம்'மொழி
செம்மொழி!!


இடம், பொருள்,
ஏவல் இவையெல்லாம்
தாமாகவே ஒருமுறை
தற்கொலையைச் சுவைக்கலாம்...


மொழிகளின் கொலைவழக்கில்
மடந்தையாய் இருந்தாலும்
உடந்தையாய் இருந்த காரணத்தினால்
நானும் ஒரு கைதியே!!!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 4/18/2007 04:24:00 PM, |

5 பின்னூட்டங்கள்:

Intha blog naa paakavey ilaye! :) Awesome kavithais..Aprama vanthu padikiren..

r U IN germany>?
Page layout is simply gr8..The rose especially! :)

Solla maranthuten!
@பொன்னரசி,

இது தான் நான் முதன் முதலாய் ஆரம்பித்த வலைப்பூ!! நீங்கள் இதனை விடுத்து ஏனைய வலைப்பூக்கள் பார்வையிட்டிருக்கிறீர்கள்..

உங்கள் வரவு நல்வரவாயிற்று! நேரம் கிடைக்கும் போது வந்து படிங்க! உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.

//r U IN germany>? //
இல்லையே. நான் இங்கே பூங்கா நகரம் பெங்களூரில் தான் இருக்கிறேன். ஜெர்மனி - எங்கள் அலுவலகக் கணினியில் தானாய்ப் பதிவு செய்யப்பட்ட தகவலாய் இருக்கும் என்று நினைக்கிறேன். Settings might have shown you the .de as Country code!

//Page layout is simply gr8..The rose especially! :) //

நன்றிங்கோ ;-)
Enna raghav, mozhi patheengala...

Nalla irukku kavithai... page romba fresh a irukku, ponnarasu sonnathu 100 percent correct.

Iniyal.
@Iniyal,

மொழி படம் பார்த்தேன் (அதைத் தானே கேட்டீங்க ;-)) அருமையான கருத்துக்களை முன்னிறுத்தும் படம். படமாக்கிய விதமும் அழகு.

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி இனியாள்..

அதற்காகவே இந்தப் பின்புலத்தை (Template) வெகு சிரமப்பட்டுத் தேர்ந்தெடுத்தேன்!