Saturday, May 27, 2006

புகைப்படக் கவிதை - தான் ஆடாவிட்டாலும்

நண்பர்களே,

கீழே உள்ள படத்தைப் பார்த்ததும் என்னுள் பிரசவித்த கவிதை... புகைப்படத்திற்கு நன்றி ரசிகவ்.. (அன்புடன் குழுமத்தில்)


பிரபஞ்சத்தில் என்னுடைய
இருப்பும் எண்ணிக்கையில்
சேர்த்துக் கொள்ளப்பட்ட சேதி
அறிந்த பின் முதன் முதலாய்
நான் பகிர்ந்து கொண்ட
என் நெகிழ்வுகளை,
அதன் ஈரத்தில் புளகாங்கிதம்
அடைந்து சிலிர்த்துப், பின்
என் தொடுதலினால்
ரோமத்தின் உராய்வின்
உண்டான வெப்பத்தில்
எழுந்து நின்று சு(ப)ய உலர்வு செய்யும்
உன் கையில் உள்ள
மயிர்க்காம்பைக் கேட்டுப் பார்!!!
அது சொல்லும் என் பரவசத்தை!!!

இதிலிருந்து தானோ இறக்குமதி
ஆனது 'தான் ஆடாவிட்டாலும்
தன் சதை ஆடும்'
என்பது நமக்குள்?

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 12:06:00 PM, |

0 பின்னூட்டங்கள்: