Saturday, April 04, 2009

திருமணக் கவிதை

பிரத்யேகப் பதியன்
ஏதும் இடாமல்
புதியதொரு பரிணாமம்!

இருவேறு திசைக‌ளில்
இருந்து முழுவீச்சில்
எதிர்பார்ப்புக்க‌ள் ம‌ற்றும்
க‌னவுக‌ளின் ச‌ஞ்சார‌ம்!

எவரொருவ‌ருக்கும் இல்லாத‌
சிறப்பான உரிமையுட‌ன்
ஒரு புது உற‌வு!

முதல்நாள் இரவில்
ஒப்புவித்த‌ க‌ன‌வுக‌ளை
மறுநாள் விடியலில் நிஜ‌மாக்கும்
வல்லமையுள்ள தேவன் இல்லை!

நிலாவைப் பிழிவேன்!
சூரியனைச் சுகிப்பேன்!
காற்றைக் கைது செய்வேன்
என வார்த்தைகளில் ம‌ட்டும்
வசீகரப்படுத்தும் கவிஞன் இல்லை!

க‌ன‌வுக‌ளை நிஜ‌மாக்கும்
முய‌ற்சிக‌ளில் க‌ஞ்ச‌த்த‌னமின்றி,
க‌விதைத்துவமான‌ வாழ்வைக்
க‌ளிப்போடு அளிக்கும் க‌ற்ப‌னையுட‌ன்,

உண்மையான‌ அன்பை
உள்ளுண‌ர்த்தி உன‌க்கும்
உண‌ர்வுகள் உண்டென்ப‌தை
உள்ளூர உண‌ர்ந்து உய்ப்பேன் என்று
உறுதிமொழியும் கவித்துவமும்,
தெய்வ‌த்துவமும் கொண்ட ம‌னிதன் !


-- மு. இராக‌வ‌ன் என்ற‌ ச‌ர‌வ‌ண‌ன்
04 ஏப்ர‌ல் 2009 ச‌னிக்கிழ‌மை மாலை 541 ம‌ணி இந்திய‌ நேர‌ப்ப‌டி

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/04/2009 07:54:00 PM, |

19 பின்னூட்டங்கள்:

உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் வாழ்த்துகள் ராகவன் :)
வாழ்த்துக்கள் ராகவன்.
  At Sunday, April 05, 2009 4:53:00 PM Blogger sumathi நவின்றது:
ஹாய் ராகவன்,

//உண்மையான‌ அன்பை
உள்ளுண‌ர்த்தி உன‌க்கும்
உண‌ர்வுகள் உண்டென்ப‌தை
உள்ளூர உண‌ர்ந்து உய்ப்பேன் என்று
உறுதிமொழியும் கவித்துவமும்,
தெய்வ‌த்துவமும் கொண்ட ம‌னிதன் //

இத படிக்கும் போது பெருமையாய் இருக்கு.இத நீங்க அப்படியே ஃபாலோ பண்ணா, நீங்களும் ஒரு பெரிய மனுஷன் னு சொல்லி உங்களுக்கும் மெரினா கடற்கரையிலே ஒரு பெரிய்ய்ய சிலை வைக்கப் படும்.

வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடனும்.
இல்லறம் சிறக்க நல்வாழ்த்துக்கள்!
  At Monday, April 06, 2009 10:48:00 AM Blogger Unknown நவின்றது:
My Hearty Wishes ever for U and meenakshi!!!


விழா

தேக்கி வைத்த உணர்வுகள் அனைத்தும்
உரிமையோடு தோற்று போகும் உன்னதமான
உறவில் மாட்டிக் கொள்ளும் அற்புத விழா !

இங்கே நடப்பது போட்டி அல்ல பொறாமை கொள்ள
உரிமையின் பங்களிப்பு விழா பகிர்ந்து கொள்ள !

உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஆனந்த விழா !

அம்மாவின் கைப்பக்குவம் கை மாறும் விழா !
அப்பாவின் அரவணைப்பு ஆள் மாறும் விழா !

இரு மனங்களின் இருபது கோடி
விண்ணப்பங்களை பரிமாறிக்கொள்ளும் திரு மண விழா !

நிழல் விட்டு பிரிந்தாலும்
நினைவை விட்டு பிரியாத உறவு கைக்கோர்க்கும் விழா !

ஊடல் உறவுகள் உச்சம் பெற
வழி கொடுக்கும் உன்னத விழா !

தனி பலத்துடன் பக்க பலம் சேரும் விழா !
வாழ்வில் பிடிப்பு சேர கைப் பிடிக்கும் விழா !

ஆம்,
கலைகள் ஆனந்த தாண்டவம் ஆட ,
அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் விழா, திருமண விழா !

வாழ்த்து ஒலியுடன் வாழ்வு தொடங்கும் வண்ண பறவைகளுக்கு
இதோ ஒரு சின்ன பரிசு !
- Courtesy Haridoss G
@பிரேம்குமார் ,

மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்தியமைக்கும்.
@விழியன்,

நன்றி தலைவா :)
@sumathi...

//இத படிக்கும் போது பெருமையாய் இருக்கு.//

மகிழ்ச்சி :)

//உங்களுக்கும் மெரினா கடற்கரையிலே ஒரு பெரிய்ய்ய சிலை வைக்கப் படும்.//

உங்களுக்கே கொஞ்சம் அதிகமாத் தெரியலீங்ங்க்க்ளாஆஆ? அவ்வ்வ்வ்....

நன்றி சுமதி வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.
@சேதுக்கரசி

நன்றி அக்கா :)
@priya,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

//அம்மாவின் கைப்பக்குவம் கை மாறும் விழா !
அப்பாவின் அரவணைப்பு ஆள் மாறும் விழா ! //

முதல் வரி ஒரு அளவுக்கு ஓ.கே! இரண்டாவது கொஞ்சம் குழப்பமா இருக்கே :) விளக்கவும்!

//இரு மனங்களின் இருபது கோடி
விண்ணப்பங்களை பரிமாறிக்கொள்ளும் திரு மண விழா ! //

இருபது கோடியா? என்னங்கப்பா நீங்களே எதுகை மோனைக்காக இந்தளவு ஒக்காந்து யோசிக்கறீங்க!! :)

//வண்ண பறவைகளுக்கு
இதோ ஒரு சின்ன பரிசு !//

கலக்கல்...

Haridoss - க்குச் சிறப்பான நன்றி. :)
  At Thursday, May 07, 2009 10:29:00 AM Blogger சீனு நவின்றது:
வாழ்த்துக்கள் ராகவன் - சீனு
Nalla kavithai raghav.
@சீனு,

நன்றி பன்னீர் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும்.


தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
@இனியாள்,

நன்றி பன்னீர் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும்.


தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
  At Wednesday, February 17, 2010 2:58:00 PM Blogger Unknown நவின்றது:
hello sir best poem to our life!thank you
  At Wednesday, February 17, 2010 3:00:00 PM Blogger Unknown நவின்றது:
super sir your mother was so lucky
@revathi,

//hello sir best poem to our life!thank you//

நன்றி வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும்.


தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
  At Wednesday, April 14, 2010 3:40:00 PM Blogger www.bogy.in நவின்றது:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
//க‌ன‌வுக‌ளை நிஜ‌மாக்கும்
முய‌ற்சிக‌ளில் க‌ஞ்ச‌த்த‌னமின்றி,
க‌விதைத்துவமான‌ வாழ்வைக்
க‌ளிப்போடு அளிக்கும் க‌ற்ப‌னையுட‌ன்,

உண்மையான‌ அன்பை
உள்ளுண‌ர்த்தி உன‌க்கும்
உண‌ர்வுகள் உண்டென்ப‌தை
உள்ளூர உண‌ர்ந்து உய்ப்பேன் என்று
உறுதிமொழியும் கவித்துவமும்,
தெய்வ‌த்துவமும் கொண்ட ம‌னிதன் !//

உண்மையான வரிகள் அண்ணா... உங்கள் திருமண வாழ்க்கை இனிதே பயணிக்கிறது என நம்புகிறேன்...:)