Wednesday, January 26, 2011

ப‌டைப்பின் பூர‌ண‌ம்

இடுப்பில் குழந்தையை
ஏந்திக் கொண்டு
இறை வழிபாட்டிற்கு
வந்தனள் தாய்!

இன்முகத்தோடு சிரித்திருந்த‌
குழந்தை “இரு! இரு!
அம்மாக்கிட்ட சொல்லித்
தர்றேன் உன்னை

என்று பெருமிதத்தோடு
மிரட்டியது கடவுளை!

த‌ன‌க்கான‌ அவ‌சிய‌ம்
இனி இல்லை என்ற‌
த‌ன்னிறைவில்,
படைப்பின் பூரணத்தில்
க‌ளித்துத் திளைத்தார் க‌ட‌வுள்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 1/26/2011 09:45:00 PM, |

1 பின்னூட்டங்கள்:

  At Sunday, October 23, 2011 12:25:00 PM Blogger Super நவின்றது:
Superb kavithai...........