Saturday, May 27, 2006

மதுமிதா - தங்கள் புத்தகத்தின் என் பக்கமிதா?

வலைப்பதிவர் பெயர்:
இராகவன் என்ற சரவணன் மு. (பெற்றோர் இட்ட பெயரே என்றும் எங்கும் எதிலும் முழுமையாக வழங்கப்பெறுகிறது). செல்லப்பெயர் உண்டு. புனைப்பெயர் இல்லை.

வலைப்பூ(க்களின்) பெயர் :
கவிதை கேளுங்கள், வாய் விட்டு சிரித்தால், திரைப்படப் பாடல் வரிகள், பக்திப் பாடல் வரிகள், இயன்ற அளவு உதவலாமே

சுட்டி(url) :
http://kavithaikealungal.blogspot.com,
http://vaaivittusiriththaal.blogspot.com,
http://thiraippadap-paadal-varigal.blogspot.com,
http://bhakthip-paadal-varigal.blogspot.com,
http://iyandra-alavu-udhavalaamae.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்:
பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த ஊர் - காரைக்குடி
படித்துப் பட்டம் பெற்ற ஊர் - கோயம்புத்தூர்
தற்பொழுது வயிற்றுப் பிழைப்புக்காக - பெங்களூர்

நாடு:
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்...

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
என் தேடும் திறனும் கூகு(கி)ள் இணையத்தளமும்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
23 செப்டம்பர் 2004 (ஆனால் அந்த வலைப்பூ தற்பொழுது உபயோகத்தில் இல்லை[ http://raghzkirukkals.blogspot.com]... பெயர்ச் சீரமைப்பு வேண்டிக் 'கவிதைகேளுங்கள்' என்ற வலைப்பூவைச் சில மாதங்களுக்கு முன்னால் ஆரம்பித்திருக்கிறேன். )

இது எத்தனையாவது பதிவு:
வலைப்பூக்களின் தோகையில் இது 22 ஆவது சிறகு (தங்களுக்கான பதிவு)

இப்பதிவின் சுட்டி(url): http://kavithaikealungal.blogspot.com/2006/05/blog-post_114871380372190392.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
எண்ணங்களை ஏடேற்றும் எளிய முயற்சிகளில் இதுவும் ஒன்று.. எனினும் என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, நிறைய நட்புள்ளங்களைச் சந்திக்க, தமிழ்ப்பிரியர்களை இணையத்தில் தரிசிக்க இப்படிச் சிலவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்

சந்தித்த அனுபவங்கள்:
உள்ளூர உணர்ந்து துய்ப்பதற்கு முன்னே என்னுள் ஏதேதோ எழுதிவிட்டு மறைந்துவிடுகின்றன..அவற்றின் அர்த்தம் 'அனுபவம்' என்ற சொல்லப்பட்டுச் சொறிந்து கொள்கிறேன் நான்.

ஆயினும் விடாது முயற்சிக்கிறேன் ஒவ்வொரு நாளிலும், நிகழ்விலும், நபரிடமும்....

பெற்ற நண்பர்கள்:
ஏராளம் - இணைய அரட்டையில், மின்னஞ்சல் அளவளாவல்களில், தொலைபேத் தொடர்புகளில் என்று பல்வேறு ஊடகங்கள் வாயிலாக.. இயல்பாகக் கலகலப்பாகப் பேசுவதின் பலனாய்ப் பெருமிதப்படுகிறேன்.

கற்றவை:
கைம்மண் அளவு ...

கற்க வேண்டியவை என ஒரு பத்தி விட்டிருக்கலாம் நீங்கள்..
எனில் அதற்கு : கடலளவு...

எனினும் தங்கள் கேள்வி நோக்கம் நிறைவேற்றும் பொருட்டு:

(1) தொழில்நுட்பப் படிப்பு - மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் (ஆங்கிலத்தில் DECE - Diploma in Electronics and Communication Engineering) - காரைக்குடி அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் ஏப்ரல் 1999ல் பட்டம் பெற்றேன்....

(2) பொறியியல் படிப்பு - தகவல் தொடர்பியல் (ஆங்கிலத்தில் BE in IT - Bachelor of Engineering in Information Technology) - கோவை மாநகரின் அமிர்தா பொறியியல் கல்லூரியில் மே 2003ல் படித்துப் பட்டதாரி ஆனேன்...

(3) முதுகலைப் படிப்பு - தற்பொழுது இராஜஸ்தானில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியில் முதுகலை - மென்பொருள் (ஆங்கிலத்தில் MS in Software Systems in Birla Institute of Technology and Science, Pilani) படித்துக் கொண்டிருக்கிறேன்.. இவ்வாண்டு நவம்பரில் பட்டம் பெற்றிடுவேன்..

இது தவிரத் தட்டச்சுப் படிப்பு (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை), நம் தேசிய மொழியாம் இந்தி (பெற்றோருக்கு முதற்கண் நன்றி).

கவிதை எழுதுவதற்கு (பாராட்டி, திருத்தி, ஆதரவளித்த மற்றும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நேச நெஞ்சங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்). என்னைச் செதுக்கிக் கொண்டிருக்கும் உளிகள் அவர்கள் தாம்....

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
சில்லென்ற காற்று சிநேகமாய்க் குசலம் விசாரிக்கையில் முகத்தின் தசைகளில் குறைகின்ற இறுக்கம் அப்படியே என் உணர்வுகள் அனைத்திலும் வியாபித்திருக்கின்றன... ஆயினும் சுதந்திரம் என்ற சொல்லின் எல்லைகளை வரையறுப்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம்! எனினும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் வளர்கிறது! கட்டுக்கோப்போடு கூடிய கட்டுக்குலையாத சுதந்திரம்!

இனி செய்ய நினைப்பவை:
முடிந்த வரை சிந்தனைச் சிறகுகளைச் சமுதாயத்தின் முன்னேற்றத்தை நோக்கி நடைபோட வைப்பது, எழுத்துக்களையும் எண்ணங்களையும் இன்னும் மெருகேற்றுவது.. ஏனோ நானும் எழுதுகிறேன் என்றிராது 'என் எழுத்தின் பயன் என்ன' என்ற எண்ணத்துடன் எழுதுவது!!

என்றும் என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வது!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
கொஞ்சம் கொஞ்சமாக முந்தைய பத்திகளில் தந்துவிட்டேன் என்னை! சேர்த்துப் படித்தால் கதம்பமாய் நான் உலாவருவேன் உங்கள் எண்ணவீதிகளில்...

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
"பிறருக்காகச் சிந்தப்படும் போது நம் கண்ணீர் கூட இனிக்கிறது".. ஆகவே முடிந்தவரை நம்மாலான சிறுசிறு உதவிகளைப் பிறருக்குச் செய்து நம் பிறவியின் பயனைச் சிறிதளவாவது செப்பனிடுவோமாக....

தமிழ் உள்ளங்களுக்கு அன்பர்களின் வலைப்பதிவுச் சேர்க்கை நல்லதொரு பயனை அளித்திடவும், தங்களின் இந்த முயற்சி முழு வெற்றி கண்டிடவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 12:37:00 PM, |

4 பின்னூட்டங்கள்:

really proud to have u as a senior na....
Keep going with ur helping tendency, blogging mind....
@inba,

thank you the compliments..

glad to have such a (younger) brother! ;-)
@inba,

thank you "for" the compliments..

(it was a typo.. eek)..
  At Sunday, April 26, 2009 1:25:00 AM Blogger Unknown நவின்றது:
First Ever Indian Language Electronics Datasheet Website
Fourth In Asia

தமிழ் தரவுத்தாள் தளம்
Tamil Datasheets
www.tamildata.co.cc

தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்