Wednesday, January 26, 2011
படைப்பின் பூரணம்
இடுப்பில் குழந்தையை
ஏந்திக் கொண்டு
இறை வழிபாட்டிற்கு
வந்தனள் தாய்!
இன்முகத்தோடு சிரித்திருந்த
குழந்தை “இரு! இரு!
அம்மாக்கிட்ட சொல்லித்
தர்றேன் உன்னை”
என்று பெருமிதத்தோடு
மிரட்டியது கடவுளை!
தனக்கான அவசியம்
இனி இல்லை என்ற
தன்னிறைவில்,
படைப்பின் பூரணத்தில்
களித்துத் திளைத்தார் கடவுள்!
Labels: கவிதை
3 பின்னூட்டங்கள்:
« முதல் பக்கத்திற்குச் செல்ல | Post a Comment
Superb kavithai...........
This comment has been removed by the author.
Super,
நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு. தாமதத்திற்கு வருந்துகிறேன்.
நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு. தாமதத்திற்கு வருந்துகிறேன்.