Wednesday, January 26, 2011
படைப்பின் பூரணம்
இடுப்பில் குழந்தையை
ஏந்திக் கொண்டு
இறை வழிபாட்டிற்கு
வந்தனள் தாய்!
இன்முகத்தோடு சிரித்திருந்த
குழந்தை “இரு! இரு!
அம்மாக்கிட்ட சொல்லித்
தர்றேன் உன்னை”
என்று பெருமிதத்தோடு
மிரட்டியது கடவுளை!
தனக்கான அவசியம்
இனி இல்லை என்ற
தன்னிறைவில்,
படைப்பின் பூரணத்தில்
களித்துத் திளைத்தார் கடவுள்!
Labels: கவிதை